28-வது பள்ளி ஆண்டுவிழா 10.01.2019
ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 28-வது பள்ளி ஆண்டுவிழா 10.01.2019 அன்று மாலை மிக விமர்சையாக நடைபெற்றது. விழாவில் பள்ளி நிர்வாகி திருமதி.கீதாராணி தியாகராஜன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்.
பள்ளித் தலைவர் திரு.A.K.C.தியாகராஜன் அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளி முதல்வர் திரு.M.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார். காவல் துறையில் ஓய்வு பெற்ற மேற்கு மண்டல I.G. உயர்திரு.A.பாரி I.P.S அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அட்டல் டிங்கரிங் உயர்தர அறிவியல் ஆய்வுக் கூடத்தைத் திறந்து வைத்து பேரூரையாற்றினார். விழாவிற்கு திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.S.சாந்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். பள்ளியின் துணைத்தலைவர்கர்கள் திரு.T.K.கருப்புசாமி, K.சாமியப்பன், செயலாளர் திரு.K.செந்தில்நாதன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு.A.R.சின்னநாச்சிமுத்து கவுண்டர், திரு.R.Kபெரியசாமி. திரு.துரைராஜ் மற்றும் திரு.T.தங்கராஜ் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள். மாணவியர்களின் கலைநிகழ்ச்சியை தமிழாசிரியர் திரு.N.R.இராசகுமாரன் அவர்கள் ஒருங்கிணைத்து வழங்கினார். பொருளாளர் திரு.N.சந்திரசேகர் அவர்கள் நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.